/* */

விழுப்புரத்தில் சமூக நல்லாசிரியர் விருது: எம்பி ரவிக்குமார் வழங்கினார்

கொரோனா காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியரை பாராட்டி சமூக நல்லாசிரியர் விருதை எம்பி ரவிக்குமார் வழங்கினார்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் சமூக நல்லாசிரியர் விருது:  எம்பி ரவிக்குமார் வழங்கினார்
X

முட்டத்துார் ஓய்காப் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாபு செல்லதுரைக்கு சமூக நல்லாசிரியர் விருதை எம்பி ரவிக்குமார் வழங்கினார்

சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் விழுப்புரம் தமிழ் இலக்கிய அமைப்புகள், மாவட்ட ஆசிரியர் சங்கங்கள் ஆகியவற்றின் சார்பில் சமூக நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் நாடாாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், சமூகநல அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ், மாவட்ட தன்னார்வ ரத்ததான இயக்க செயலாளர் கோபிநாத், மல்லர் கம்பம் கழகம் உலகதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாவட்ட நிர்வாகத்திற்கு உறுதுணையாக கொரோனா கட்டுப்பாட்டு அறை பணி செய்தல், துாய்மை பணியாளர்களுக்கு சொந்த செலவில் சேவை செய்தல் ஆகியவற்றுக்காக முட்டத்துார் ஓய்காப் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாபு செல்லதுரையின் சிறப்பான பணிகளை பாராட்டி சமூக நல்லாசிரியர் விருதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வழங்கி பாராட்டி பேசினார்.

மருதம் ஒருங்கிணைப்பாளர் ரவிகார்த்திகேயன், தமிழ் இலக்கிய அமைப்பு எழில் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி, பாராட்டி பேசினர்,

Updated On: 6 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  3. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  4. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  5. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  6. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  7. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  9. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  10. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு