/* */

புதிய வீடு கிரையம் என்ற பெயரில் மோசடி: ஒருவர் கைது

விழுப்புரத்தில் புதிய வீட்டை விற்பனை செய்வதாக கூறி ரூபாய் 41 லட்சம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்

HIGHLIGHTS

புதிய வீடு கிரையம் என்ற பெயரில் மோசடி: ஒருவர் கைது
X

காட்சி படம் 

விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 44). இவர் விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலையில் வசிக்கும் ஹரிசங்கர் என்பவரிடமிருந்து புதியதாக கட்டிய வீட்டை கிரையம் செய்வதற்காக ரூ.40 லட்சத்திற்கு விலைபேசி ரூ.20 லட்சத்துக்கு கிரைய உடன்படிக்கை பத்திரம் எழுதி முன்பணமாக ரூ.20 லட்சத்தை கொடுத்துள்ளார். அந்த பத்திரத்தில் ஹரிசங்கரின் மனைவி சித்ரா சாட்சி கையொப்பமிட்டுள்ளார்.

பின்னர் ஹரிசங்கருக்கு சொந்தமான வீட்டை கிரையம் செய்ய சீனிவாசன் அழைத்துள்ளார். அதற்கு அவர், தனது நண்பரின் வீடு மீது வங்கி கடன் இருப்பதால் கடனை அடைத்தால்தான் வீட்டை கிரையம் செய்ய முடியும் என்று கூறியதால் வங்கி கடனை அடைக்க சீனிவாசனின் வங்கி கணக்கிலிருந்து ஹரிசங்கரின் வங்கி கணக்கு எண்ணிற்கு ரூ.17 லட்சத்தை அனுப்பியுள்ளார். மீண்டும் ஹரிசங்கர் பணம் தேவைப்படுவதாக கூறியதால் ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்தை நேரடியாக ஹரிசங்கரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் சீனிவாசனுக்கு அந்த வீட்டை கிரையம் செய்து கொடுக்காமலும், ரூ.41 லட்சத்து 2 ஆயிரத்தை திருப்பிக்கொடுக்காமலும் ஹரிசங்கர், சித்ரா ஆகிய இருவரும் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து சீனிவாசன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஹரிசங்கர், சித்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிசங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Sep 2022 12:38 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  5. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  7. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  8. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  10. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு