/* */

விழுப்புரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Demonstrative Speech - விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி முன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Demonstrative Speech -விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் காமராஜ்,பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை சாசனங்கள் மீது பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பதவிகளில் நேரடி நியமனத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 29 சதவீத பதவிகளை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும், பணியாளர்களின் பணி நிலைத்திறன் மாற்றம் செய்ய வேண்டும், மாநில ஆள்சேர்ப்பு மையத்தின் மூலம் 2015-16-ம் ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட உதவியாளர்கள் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

நிலவள வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பாஸ்கரன், நகர வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தண்டபாணி, மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்க துணைத்தலைவர் அன்பரசன், துணை செயலாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் உத்ரா, பூரணி, சங்கீதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 July 2022 10:32 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!