Begin typing your search above and press return to search.
விக்கிரவாண்டி அருகே காணை குப்பத்தில் பள்ளி மாணவி கடத்தல்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை குப்பத்தில் பள்ளி மாணவியை கடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் மகன் ஜனார்த்தனன் (வயது 24). இவர் ஆயந்தூரை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற ஜனார்த்தனனையும் தேடி வருகின்றனர்.