Begin typing your search above and press return to search.
விழுப்புரத்தில் இலவச வீடு கட்டுமானப்பணி: கலெக்டர் நேரில் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு சார்பில் பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் இலவச வீடு கட்டுமான பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட புதுகாலனி பகுதியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) திட்டத்தின்கீழ், தொகுப்பு வீடு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பணிகளின் முன்னேற்றம், அடுத்த கட்ட பணிகள் குறித்து, அவர் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது, திட்ட இயக்குநர் உட்பட பலர் உடனிருந்தனா்.