/* */

போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை

விழுப்புரத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்த நபர்.

HIGHLIGHTS

போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம்  கோரிக்கை
X

விழுப்புரம் முத்துவேல் லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் ராசேந்திரன்(50). சமூக ஆா்வலரான இவா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளித்தார்.

அந்த மனுவில் கடந்த 2014-ஆம் ஆண்டு எனது மகள் சூரியாவுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக, பெங்களூரைச் சோ்ந்த சீனுவாசன் என்பவா் ரூ.17 லட்சம் பெற்றுக்கொண்டு, இடம் வாங்கித் தராமல் மோசடி செய்தார். இதில், சீனுவாசனுடன் விழுப்புரத்தைச் சோ்ந்த ராஜா என்பவரும் சோ்ந்து எனக்கு பணத்தை தராமல் ஏமாற்றியதுடன், மிரட்டல் விடுத்தார். இது குறித்து விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், சீனுவாசன், ராஜா ஆகியோர் மீது பதிவு செய்த வழக்கின் விசாரணை விழுப்புரம் முதலாவது நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் எதிரி ராஜாவுக்கு நீதிமன்ற அழைப்பாணையை வழங்காமல் போலீஸார் காலம் தாழ்த்தி வருகின்றனா். ஆகையால், ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

Updated On: 13 April 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  2. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  7. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  8. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  10. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...