/* */

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அவலூர்பேட்டையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து காவல் ஆய்வாளர் அறிவுறுத்தினார்

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அவலூர்பேட்டையில் நடைபெற்றது. இதற்கு சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுபா தலைமை தாங்கி, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறினார்.

மேலும் சாலை விதிகளை அனைவரும் பின்பற்றி விபத்துகளை குறைக்க போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முடிவில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் அவலூர்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வநாத், சிறப்பு காவல் ஆய்வாளர் கேசவன், முதன்மை காவலர் அய்யப்பன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Updated On: 22 March 2022 5:57 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்