Begin typing your search above and press return to search.
செஞ்சி அருகே ஓட்டல் ஊழியர் விபத்தில் உயிரிழப்பு
Road Accident News Today - விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சரக்கு வாகன விபத்தில் ஓட்டல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
Road Accident News Today -விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள வெளாமை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஏழுமலை (வயது 48). இவர் செஞ்சியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் வழக்கம் போல் வெளாமை கிராமத்தில் இருந்து செஞ்சிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சக்தி கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2