/* */

செஞ்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்

செஞ்சியில் வடகிழக்கு பருவமழையின் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

செஞ்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்
X

ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது.

இந்த வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு வரவேற்றார். இந்த வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கிராமங்களில் உள்ள பொது மக்களுக்கு அனைத்தையும் செய்ய வேண்டியது ஊராட்சி மன்ற தலைவர்களின் கடமை. எனவே ஊராட்சி மன்ற தலைவர்களாகிய நீங்கள் வரும் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மழைபாதிப்புகள் ஏற்படாத வகையில், திட்டமிட்டு செயல்பட வேண்டும். நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு, வரத்து குறித்தும் அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமலும் பாரித்துக்கொள்ள வேண்டும். யாரேனும் மழையால் பாதிப்புக்கு உள்ளானால், உடனடியாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்திட வேண்டும். நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் நீங்கள் எந்த உதவி வேண்டுமானாலும் என்னை நேரில் அணுகி பெறலாம் என்று பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்க தலைவர் அணையேரி ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாறன், கண்ணன், சவுந்தரபாண்டியன், கலா, கோவிந்தராஜூலு மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதிக்குட்பட்ட ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையின் போது பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது தாழ்வான பகுதிகளை கண்காணிக்க வேண்டும் மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் சூழும் மழை நீர்களை உடனடியாக வெளியேற்ற அந்தந்த ஊராட்சிகள் கடமையாற்ற தயாராக இருக்க வேண்டும் மேலும் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆறுகள் ஏரிகள், குளங்கள் ஆகியவற்றிற்கு மழை காலத்தின் போது பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். அங்கு துணி துவைத்தல் குளித்தல் போன்றவற்றை நிறுத்திக் கொண்டு வீடுகளிலேயே தங்கள் பணிகளை செய்ய வேண்டும். மேலும் மழையின் போது மின்சார கம்பங்கள் அருகேவும் கம்பிகளருகேயும் செல்லும்போது பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வடகிழக்கு பருவமழையின் போது பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

Updated On: 4 Oct 2022 3:26 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  9. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!