Begin typing your search above and press return to search.
மேல்மலையனூர் அங்காளம்மன் மாசி பெருவிழா ஆலோசனை கூட்டம்
மேல்மலையனூர் அங்காளம்மன் மாசி பெருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில் ஆலய அலுவலகத்தில், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசிப்பெருவிழா நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், முன்னிலையில் அனைத்துத்துறை உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று (26.02.2022) நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி, மேல்மலையனூர் ஒன்றிய குழுத்தலைவர் நெ.கண்மனி நெடுஞ்செழியன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.