/* */

தடுப்பூசி போட்டதால் தப்பித்தேன் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

2 தடுப்பூசியை போட்டதால் தான் கொரோனா மீண்டும் தாக்கிய போதும் உயிர் பிழைத்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

HIGHLIGHTS

தடுப்பூசி போட்டதால் தப்பித்தேன் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு
X

அமைச்சர் துரைமுருகன்

வேலூர் வாணியர் வீதியில் ஜெயின் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 1,93,915 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு வழங்கும் இந்த இலவச தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். இதனை போட்டால் செத்து போய்விடுவோம் என்று நினைக்கிறார்கள்.

அது தவறானது. நான் 2 தடுப்பூசியை போட்டதால் தான் மீண்டும் என்னை கொரோனா தாக்கிய போதும் உயிர் பிழைத்தேன்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் தடுப்பூசி போட்டுகொண்டதால் கொரோனாவை அவர்கள் வெற்றிகொண்டுள்ளனர். ஆனால் இங்கே தவறான தகவலால் தடுப்பூசி போட்டு கொள்ள அஞ்சுகிறார்கள். தடுப்பூசி போட்டு கொண்டு உங்களையும் சமுதாயத்தையும் காத்து கொள்ளுங்கள். அப்போது தான் கொரோனாவை நாம் முழுமையாக ஒழிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 27 May 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...