Begin typing your search above and press return to search.
நல்லவன்பாளையம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்கிவைப்பு
திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் கிராமத்தில், இல்லம் தேடி கல்வி திட்டத்தை சி.என்.அண்ணாதுரை எம்.பி.,தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை நல்லவன்பாளையம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், உதவி திட்ட அலுவலர் விஜயன்,ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை எம்.பி.,கலந்து கொண்டு "இல்லம் தேடி கல்வி திட்டத்தை" குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நல்லவன்பாளையம் ஊராட்சி தலைவர் ரவிக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் கஸ்தூரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், திருவண்ணாமலை நகர திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், ஒன்றிய செயலாளர்கள், வட்டார கல்வி மைய அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.