/* */

கோயில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவத்தினா், தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

HIGHLIGHTS

கோயில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவத்தினா், தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களின் பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலா்களாகப் பணியாற்ற நல்ல உடல் ஆரோக்கியமும், விருப்பமும் உள்ள 62 வயதுக்கு உள்பட்ட முன்னாள் படைவீரா்கள் தேவைப்படுகிறாா்கள்.

எனவே, மாவட்டத்தைச் சோந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது பெயரை முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04175-233047 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Jan 2023 12:30 AM GMT

Related News