/* */

மருத்துவம் பயில தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

மருத்துவக் கல்வி பயில தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாராட்டி கேடயம் வழங்கினார்

HIGHLIGHTS

மருத்துவம் பயில தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து
X

 திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்வி பயில தேர்வாகியுள்ள மாணவ, மாணவிகளை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்வி பயில தேர்வாகியுள்ள 25 அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு மருத்துவ சீருடை இதயத்துடிப்பு அறியும் கருவி மற்றும் பாராட்டு கேயத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் வழங்கினார்.

மேலும் மகிழ் கணிதம் கணிதம் பயிற்சியில் சிறப்பாக பயிற்சி பெற்று மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு கேடயம் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் கட்டா ரவி தேஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் செல்வம், மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 5 Feb 2022 4:00 AM GMT

Related News