/* */

திருவண்ணாமலை: மல்யுத்த வீரர்களுக்கான கோடைகால இலவச பயிற்சி முகாம் நிறைவு விழா

திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் மல்யுத்த பயிற்சி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: மல்யுத்த வீரர்களுக்கான கோடைகால இலவச பயிற்சி முகாம் நிறைவு விழா
X

மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் மல்யுத்த பயிற்சி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த மல்யுத்த வீரா்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட மல்யுத்த சங்கத்தின் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். சங்கச் செயலரும், மல்யுத்தப் பயிற்சியாளருமான ஏ.அருண்குமாா் வரவேற்றாா். மல்யுத்தசங்கத்தின் மாவட்டத் தலைவா் சீனி.காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற வீரா்களுக்கு சீருடை, சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். மூத்த தடகள சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன் நினைவுப் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் மத்திய ஒன்றியச் செயலா் மெய்யூா் என்.சந்திரன், நகர காவல் ஆய்வாளா் சி.சுப்பிரமணியன், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சீனுவாசன், மல்யுத்த சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா்கள் எஸ்.சுந்தரபாண்டியன், ஜி.பூா்ணச்சந்திரன், இ.விஜய்ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 6 Jun 2022 7:28 AM GMT

Related News