Begin typing your search above and press return to search.
தோட்டக்கலை துறை சார்பில் காய்கறித் தோட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள்
தோட்டக்கலை துறை சார்பில் காய்கறித் தோட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்களை சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி வெளியிட்டார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்டத்தினை பயனாளிகளுக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி வழங்கினார்.
அப்போது விழிப்புணர்வு பிரசுரங்களையும் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் , கூடுதல் ஆட்சியர் பிரதாப், வேளாண்மை இணை இயக்குனர் முருகன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிதம்பரம் மற்றும் துறை அலுவலர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.