Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேர் கைது
திருவண்ணாமலை அருகே காட்டு பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராம காட்டுப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டுப்பன்றி வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த பவித்திரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், பிரகாஷ், ரமேஷ் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து காட்டுப் பன்றி இறைச்சியை பறிமுதல் செய்து மூவருக்கும் தலா 20 ஆயிரம் வீதம் மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். தப்பிச்சென்ற மேலும் இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.