அமைச்சர் சேகர்பாபுவிற்கு அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அமைச்சர் சேகர்பாபுவின் செய்திதான் செய்தித்தாள்களில் வருகிறது என அமைச்சர் வேலு புகழாரம்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அமைச்சர் சேகர்பாபுவிற்கு அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்
X

கலசபாக்கம் அருகே அன்னதான மண்டபத்தை திறத்து வைத்த அமைச்சர்கள் 

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் இந்து சமய அறநிலை துறை சார்பில் திருக்கோயில்களின் வளர்ச்சிப் பணிகள், சாலை மேம்பாடு, கிரிவலப்பாதை ஆய்வு, கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் எ வ.வேலு , சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறும்போது, தீபத்திருவிழாவை பொறுத்தவரையில், இது கொரோனா காலம் என்பதால் அனைத்து விதமான சூழ்நிலைகளையும் ஆராய்ந்த பின்னர் தான் ஒரு முடிவுக்கு வர முடியும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஓராண்டுக்குள் செய்து கொடுக்கப்படும். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குளங்கள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தால் அஷ்ட லிங்க கோவில்களும் திருப்பணிக்கு எடுத்து கொள்ளப்படும் என்று கூறினார்.

அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் செய்திதான் செய்தித்தாள்களில் தினமும் வருவதைப் பார்க்கிறேன். அந்தளவுக்கு உழைக்கிறார். கோரிக்கை விடுத்த 48 மணி நேரத்தில் உடனடியாக செய்து தந்துவிடுகிறார்.

என்னிடம் ஒரு கோரிக்கை வந்தால் அது செய்ய முடியுமா? முடியாதா? என்ன சிக்கல், துறை செயலாளர் என்ன சொல்கிறார் என அறிந்து கொள்ளவே குறைந்தது 15 நாட்களாகிறது. இவர் 48 மணி நேரத்தில் கோரிக்கையை நிறைவேற்றிவிடுகிறார் என புகழ்ந்தார்

உடனடியாக செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் வேலு கேட்டு எதையும் இல்லையென எங்களால் சொல்லமுடியாது. அதனால் அவர் மாவட்டத்தில் எங்கள் துறையில்அவர் கேட்டதெல்லாம் செய்து தரப்படும் எனப் பதிலுக்குப் புகழ்ந்தார்.

Updated On: 28 Oct 2021 1:51 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...
  5. கும்மிடிப்பூண்டி
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
  7. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  9. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  10. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...