/* */

செய்யாறு அருகே அரசு பேருந்து மோதி விபத்து: மூன்று பேர் உயிரிழப்பு

செய்யாறு அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

செய்யாறு அருகே அரசு பேருந்து மோதி விபத்து: மூன்று பேர் உயிரிழப்பு
X

செய்யாறு அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா நெகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், இவர் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பஸ்சில் டிரைவராக பணிபுரிகிறார்.

இவர் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தார். இவரது மனைவி ஞான பிரியா மற்றும் இவர்களது மகள் திலக்சனா ஆகியோர் இருசக்க வாகனத்தில் நெகனூருக்கு சென்றார். பின்னர் 3 பேரும் இருசக்க வாகனத்தில் வந்தவாசி வழியாக காஞ்சீபுரத்துககு திரும்பிக்கொண்டிருந்தனர்.

தேத்துறை கிராமத்தின் அருகே சென்ற போது காஞ்சீபுரத்திலிருந்து எதிரே புதுச்சேரி நோக்கிச்சென்ற அரசு பஸ் ரமேஷ் ஓட்டி வந்த இருசக்க வாகனத்தில் நெகனூருக்கு சென்றார். பின்னர் 3 பேரும் இருசக்க வாகனத்தில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் ரமேஷ் மற்றும் அவரது மகள் திலக்சனா ஆகியோர் அந்த இடத்திலேயே இறந்து விட்டனர். தகவலறிந்த அனக்காவூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த ஞானபிரியாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இது குறித்து ரமேஷின் தம்பி பார்த்திபன் அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான பஸ் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இறந்த 3 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அரசு பஸ் டிரைவர் மனைவி, மகளுடன் வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ்சே மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Sep 2023 1:36 PM GMT

Related News