/* */

திருத்தணி: சாலையில் சுற்றித் திரிபவர்களை ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு!

திருத்தணியில் அத்தியாவசிய தேவைகள் இன்றி ஊர் சுற்றுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் ஏடிஎஸ்பி மீனாட்சி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருத்தணி: சாலையில் சுற்றித் திரிபவர்களை ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு!
X

திருத்தணியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.

திருவள்ளூரை அடுத்த திருத்தணியில் கொரோனா ஊரடங்கு காரணமாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை திருத்தணி பைபாஸ் சாலை, ம.பொ.சி சாலை போன்ற நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லாதவாறு கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி, திருத்தணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன், திருத்தணி இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் நகரின் முக்கிய பகுதிகளில், சாலைகளில் சுற்றித் திரிபவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி சாலைகளில் சுற்றி திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.

திருத்தணி நகரில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. எனவே, அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் ஆய்வாளர் ரமேஷ் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

திருத்தணியில் இதுவரை, முக கவசம் அணியாமல் சென்றதாக 670 வழக்குகளும் சாலைகளில் சுற்றித் இருந்ததாக 116 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஏ.டி.எஸ்.பி மீனாட்சி தெரிவித்தார்.

Updated On: 21 May 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு