/* */

குழந்தைகளிடம் பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பெற்றோர்கள் தர்மஅடி

குழந்தைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பெற்றோர்கள் தர்மஅடி கொடுத்தனர்.

HIGHLIGHTS

குழந்தைகளிடம் பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பெற்றோர்கள் தர்மஅடி
X

பைல் படம்.

திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள வெளியாகரம் பஞ்சாயத்து பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 55 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

இதே பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக பணி புரியும் பொதட்டூர்பேட்டை திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ஜெய கோபி(46) என்ற ஆசிரியர் பள்ளியில் பயின்றுவரும் மாணவிகளிடம் குழந்தைகளிடம் சாக்லெட் மற்றும் செல்போன் கொடுத்து விளையாடுவதுபோல் நடித்துக்கொண்டு பாலியல் சீண்டல் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த குழந்தைகள் பெற்றோர்களிடம் கூறமுடியாத அளவிற்கு தகாத செயல்களில் ஆசிரியர் ஈடுபட்டுள்ளார். இந்த குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களிடம் கூறி வந்த நிலையில் அந்த பள்ளிக்கு 50க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அந்தப் பள்ளியின் முன்பு வைத்து ஆசிரியர் ஜெய கோபியை கடுமையாக தாக்கினர்.

ஆசிரியர்கள் மீது கடுமையான தண்டனை தமிழக அரசு வழங்க வேண்டும். இதுபோல் ஆசிரியர்கள் இருந்தால் எப்படி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, குழந்தைகளின் பாதுகாப்பு எப்படி என்பதனை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மறுபரிசீலினை செய்து குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆசிரியர்களின் தகுதி தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

இப்படி கேவலமான முறையில் தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஜெய கோபி மீது கடுமையான தண்டனையை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பெற்றோர்கள் ஜெய கோபி ஆசிரியர் கடுமையாக தாக்கி பள்ளிப்பட்டு காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவ இடத்தில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் துறையை சேர்ந்த ஆய்வாளர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெய கோபி மீது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.






Updated On: 6 March 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?