/* */

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி

திருவள்ளூரில் 100 சதவீத வாக்களிப்பதின் அவசியத்தை குறித்து பெண்கள் கலந்து கொண்ட இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி
X
பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருவள்ளூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.அதனை ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூரில் பெண்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.அதனை திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் காமராஜர் சிலை, உழவர் சந்தை, பேருந்து நிலையம், ஈக்காடு வரை நடைபெற்றது.இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம், எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது நமது கடமை என்றபதாகைகளை ஏந்தி பொது பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் ஊர்வலமாக சென்றனர்.இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 April 2024 5:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு