Begin typing your search above and press return to search.
திருவள்ளூர்: கொரோனா பெண் நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கிய தமுமுகவினர்!
சென்னீர்குப்பம் பகுதியில் பெண் கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கி தமுமுகவினர் உயிரை காப்பாற்றினர்.
HIGHLIGHTS
கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் தமுகவினர் சார்பாக பல்வேறு கட்டமாக நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம் பகுதியில் கொரோனா பெண் நோயாளி ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக ஆக்சிஜன் செரிவூட்டி தேவைப்படுவதாக தமுமுகவினருக்கு தகவல் அளித்தார்.
இதனையடுத்து ஆக்சிஜன் செரிவூட்டி ஒன்றை எடுத்துச் சென்று பெண் கொரோன நோயாளிக்கு வழங்கி பெண் கொரோனா நோயாளியின் உயிரை காப்பாற்றினர். அவர்களை உறவினர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.