/* */

ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் விசாரணை

பொன்னேரியில் உள்ள ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் விசாரணை
X

பைல் படம்.

கடந்த 2001-இல் ஆதிதிராவிட மக்களுக்காக கொசப்பூர் என்ற பகுதியில் அப்போது பொன்னேரி வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த போது, 139 பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது அம்பத்தூர் வருவாய் துறையின் கீழ் வரும் நிலையில், அப்போது பட்டா வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சென்னை ஆலந்தூரில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் வர்னிகாஸ்வரி தலைமையில் 4 லஞ்ச ஒழிப்பு போலீசார், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் மாடியில் செயல்படும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.

2001-இல் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், அது தொடர்பான நகல்கள் மட்டுமே இங்கு உள்ளதாகவும், சென்னை குறளகத்தில் அசல் கோப்புகள் உள்ளதாகவும், நகல் கோப்புகளை யாருக்கும் அனுப்ப கூடாது எனவும் கூறி விட்டு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருவாய்த்துறையில் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கியது தொடர்பான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதால் வருவாய்த்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Updated On: 30 March 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!