/* */

பொன்னேரி அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; வடமாநில தொழிலாளர்கள் மூவர் கைது

பொன்னேரி அருகே இருவேறு இடங்களில் 11.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். வடமாநில தொழிலாளர்கள் 3பேர் கைது. கிடங்கு உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே ரேஷன் அரிசி பறிமுதல்; வடமாநில தொழிலாளர்கள் மூவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கடத்திய லாரி

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியில் குடோன்களில் சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவதாக சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சுமார் 10டன் எடைகொண்ட ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 5 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் அபினேஷ்குமார், ஜெய்சிபஸ்மான், பிரகாஷ்குமார் ஆகிய மூவரை கைது செய்து தலைமறைவான கிடங்கு உரிமையாளர் ஜோஷுவா என்பவரை தேடி வருகின்றனர்.

இதே போல கவரைப்பேட்டை அடுத்த ஆர்.என்.கண்டிகை பகுதியில் கேட்பாரற்று கிடந்த சிறிய சரக்கு வாகனத்தை போலீசார் கைப்பற்றி ஆய்வு நடத்தி ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1.5டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கடத்தல் கும்பல் குறித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்

Updated On: 9 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!