/* */

பனப்பாக்கம்: தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை

பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

HIGHLIGHTS

பனப்பாக்கம்: தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் பீரோவை உடைத்து நகை,  பணம் கொள்ளை
X

பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவன  ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபாகரன் 37 சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கனிமொழி, மகள் ரக்ஷனா, மகன் முகுந்த குமார் ஆகியோர் நேற்று இரவு வீட்டு வராண்டாவில் படுத்து தூங்கினார்.

இன்று காலை எழுந்து பார்த்தபோது அவர்களது வீட்டின் படுக்கை அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 10.5 சவரன் தங்க நகைகளும், பல கிலோ எடையுள்ள வெள்ளி நகைகளும் ரூ. 16 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 25 Jun 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!