/* */

பெரியாபளையம் பவானி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு திடீர் ஆய்வு!

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

பெரியாபளையம் பவானி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு திடீர் ஆய்வு!
X

பெரியபாளையம் கோவிலில் தயாரிக்கப்படும் உணவின் தரத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி இல்லை. பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லாத நிலையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் சார்பில் கோவில்களில் வழங்கப்படும் உணவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் சமைக்கப்படும் உணவு திருவள்ளூர், கச்சூர், ஊத்துக்கோட்டை, பெரம்பூர், பெரியபாளையம், வெள்ளியூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் இன்று தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பெரியபாளையம் கோவிலுக்கு திடீரென நேரில் சென்று உணவு சமைக்கும் இடங்களை ஆய்வு செய்தார். மேலும் உணவின் தரத்தை சரிபார்த்தார். உணவு பொட்டலங்களை தயார் செய்யும் முறைகள் குறித்தும் உணவின் அளவு குறித்தும் கோவிலின் நிர்வாக அறங்காவலர் லோகமித்ரனிடம் சில அறிவுரைகளை வழங்கினார்.

Updated On: 30 May 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!