/* */

இருசக்கர வாகன திருடியவர் கைது: வாகனத்தை மீட்ட போலீஸார்

இருசக்கர வாகன திருடியவர் கைது: வாகனத்தை மீட்ட போலீஸார்
X

பெரியபாளையத்தில் இருசக்கர வாகன திருடனை கைது செய்த காவல்துறையினர் 1.5லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை சேர்ந்த வருண் என்பவர் அண்மையில் சுமார் 1.5லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வாங்கி இருந்தார். கடந்த 15ஆம் தேதி இரவு இரவு இவரது வீட்டின் வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து வருண் பெரியபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். பெரியபாளையத்தில் போலீசார் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி சிக்கிய போது திருடப்பட்ட இருசக்கர வாகனம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருசக்கர வாகன திருடன் அஸ்வக்கை கைது செய்து அவனிடம் இருந்த திருடு போன இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் மீட்டனர். தொடர்ந்து வேறு எங்கெல்லாம் கைவரிசையில் ஈடுபட்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 28 Feb 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  2. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  3. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  4. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  5. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  6. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  7. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  9. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  10. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்