Begin typing your search above and press return to search.
கும்மிடிப்பூண்டியில் மளிகை கடையில் போலீஸ் எனக் கூறி மாமூல் வசூலித்த இருவர் கைது
Police News -கும்மிடிப்பூண்டியில் மளிகை கடையில் போலீஸ் எனக் கூறி மாமூல் வசூலித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
Police News -திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுப்பகுதிகளில் கடைகளில் போலீஸ் எனக்கூறிய இருவர் குட்கா பொருட்கள் விற்பனை செய்கிறீர்களா என மிரட்டி 1000ரூபாய் மாமூல் வசூலித்துள்ளனர்.
இதே போல அருகில் உள்ள கடையிலும் மாமூல் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த வியாபாரிகள் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வியாபாரிகளிடம் போலீஸ் என ஏமாற்றி மாமூல் வசூலித்த சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2