/* */

அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா பரவும் அபாயம்.

வடமதுரையில் அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

HIGHLIGHTS

அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா  பரவும் அபாயம்.
X

சமூக இடைவெளியின்றி நடக்கும் வாரசந்தை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பதுடன், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

பெரியபாளையம் அடுத்த வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபம் அருகே, அனுமதியின்றி வாரந்தோறும் காய்கறிச் சந்தை நடைபெற்று வருவது வழக்கம். அதேபோல் இந்த வாரமும் வாரச்சந்தை வழக்கம்போல் நடைபெற்றது. இந்த அனுமதி இல்லாத வாரச்சந்தையில் மக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதுடன் சமூக இடைவெளி, முக கவசம் போன்ற தமிழக அரசின் சட்ட விதிமுறைகள் அனைத்தும் கேள்விக்குறியாக மாறியதால் நோய்த்தொற்றும் வேகமாகப் பரவி வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும், ஊராட்சி மன்ற நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 April 2021 7:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?