அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குளம் போல தேங்கி நிற்கும் மழை நீரால் மக்கள் அவதி
பெரியபாளையத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார உட்புற சாலை இல்லாததால் குளம் போல தேங்கி நிற்கும் மழை நீர்
HIGHLIGHTS
பெரியபாளையத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார உட்புற சாலை இல்லாததால் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி வழியை பயன்படுத்த நோயாளிகள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இந்த மருத்துவமனைக்கு நாள் தோறும் பெரியபாளையம் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இது மட்டுமல்லாமல் இந்த மருத்துவமனையில் பிரசவம், அறுவை சிகிச்சை உள்ளிட்டவை அறைகளும் செயல்பட்டு வருகின்றன.
அனைத்து வசதிகள் உள்ள இந்த மருத்துவமனைக்கு உட்புற சாலை வசதி சுமார் 15 ஆண்டுகளாக இல்லை என்றும், இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலருக்கும் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லை என்றும், 24 மணி நேரமும் மருத்துவர் மருத்துவமனையில் அமர்ந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ரத்தப் பரிசோதனை ஆய்வக கட்டிடத்தில் பழுதடைந்து மழை நீர் கசிந்து வருகிறது. எனவே அரசு கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.