/* */

திருவேற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது

திருவேற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவேற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது
X

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கால் மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ள நிலையில் சிலர் சட்டவிரோதமாக மொத்தமாக வாங்கி வைத்து, தற்போது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருவேற்காடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக திருவேற்காடு காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து, விரைந்து சென்ற ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் அன்பு நகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரனை செய்தனர்.

அதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்புசாமி(20), மாரியப்பன் (29) ஆகிய இருவர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த 50 பீர் பாட்டில்கள் என மொத்தம் 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதில் 130 ரூபாய் விலையுள்ள 1 பாட்டில் 300 முதல் 400 வரையிலும், 150 ரூபாய் விலை கொண்ட பீர் பாட்டில் 500 முதல் 600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது

Updated On: 23 May 2021 3:19 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!