பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார்
The Police Has Arrested The Thief -பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS
The Police Has Arrested The Thief - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயல், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முகமது அலி (22). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி செய்து வருகிறார். கடந்த 5ம் தேதி தனது பைக்கை, குடியிருப்பின் கீழ் தளத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை பணிக்கு செல்வதற்காக கீழே வந்து பார்த்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது பைக் திருடுபோயிருப்பது முகமது அலிக்கு தெரியவந்தது.
இதுகுறித்து முகமத் அலி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அக்குடியிருப்பின் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் குடியிருப்புக்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள் முகமது அலியின் பைக்கை திருடி கொண்டு போவது பதிவாகி இருந்தது. பின்னர் அதில் பதிவான உருவங்களை வைத்து, 2 மர்ம நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான உருவங்களை வைத்து, பூந்தமல்லி அருகே காடுவெட்டி பகுதியை சேர்ந்த புதிய வீடுக்கு பிளம்பர் வேலை செய்து வரும் தினேஷ்குமார் (29), வேலூர் மாவட்டம், காந்தி நகரை சேர்ந்த கோபி (24) ஆகிய இருவரையும் நேற்று மாலை திருவள்ளூர் அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகள் பறிமுதல் செய்தனர். பின்னர் திருட்டில் ஈடுபட்ட தினேஷ் குமார் மற்றும் கோபி ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2