/* */

திருவள்ளூரில் போதிய படுக்கை, ஆக்சிஜன் இருப்பு உள்ளது: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் இருப்பு போதிய அளவு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் போதிய படுக்கை, ஆக்சிஜன் இருப்பு  உள்ளது: மாவட்ட ஆட்சியர் தகவல்
X

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி சார்பாக காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய படுக்கை வசதிகள்,ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி சார்பாக காய்ச்சல் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.இந்த முகாமினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் பங்கேற்று துவக்கி வைத்தார். மேலும் வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முககவசம் அணிவதை வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பணியாளர்களுக்கு கூறினார். இதனை தொடர்ந்து பணியாளர்களுக்கு பல்ஸாக்சி மீட்டர் மற்றும் உபகரணங்கள் வழங்கினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திருவள்ளூர் மாவட்டம் பொறுத்தமட்டில் முதல் தவணை தடுப்பூசி 87% செலுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 13 % மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். அவர்களை தடுப்பூசி செலுத்த வைக்க வேண்டும் என்பது தான் முதல் பணியாக உள்ளது.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள்,ஆக்சிஜன் இருப்பு போதுமான அளவு உள்ளது,தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு வகுத்துள்ள வழிமுறைகள் படிதான் தனியார் மருத்துவ மனைகள் செயல்பட சமீபத்தில் நடந்த கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.' இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் சுகாதார செயல் அலுவலர் அப்துல் ஜாபர் மற்றும் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் களப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!