/* */

தாக்குதலுக்கு கண்டனம்: உடுமலையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உடுமலையில் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தாக்குதலுக்கு கண்டனம்: உடுமலையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
X

வழக்கறிஞரை தாக்கியவர் மீது நடவடிக்கை கோரி, உடுமலையில், திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பார்த்தசாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன், வழக்கறிஞர். இவரை அதே பகுதியை சேர்ந்த 5 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சென்னியப்பன், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் சென்னியப்பன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கோவை - திண்டுக்கல் ரோட்டில், வழக்கறிஞர்கள் இன்று, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், வழக்கறிஞர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 30 Jun 2021 1:23 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...