/* */

அமராவதி பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி துவக்கம்

Tirupur News-உடுமலை, அமராவதி பிரதான கால்வாயில், 4.92 கோடி ரூபாய் மதிப்பில், 9 கி.மீ., துாரம் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.

HIGHLIGHTS

அமராவதி பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி துவக்கம்
X

Tirupur News-உடுமலை, அமராவதி பிரதான கால்வாயில், 4.92 கோடி ரூபாய் மதிப்பில், 9 கி.மீ., துாரம் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.

Tirupur News,Tirupur News Today- உடுமலை, அமராவதி பிரதான கால்வாயில், 4.92 கோடி ரூபாய் மதிப்பில், 9 கி.மீ., துாரம் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதில், புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 25,500 ஏக்கர் நிலங்களுக்கு பிரதான கால்வாய் வழியாக நீர் வழங்கப்படுகிறது. அணையிலிருந்து, 64 கி.மீ., துாரம் அமைந்துள்ள பிரதான கால்வாய், 60 ஆண்டுக்கு மேல் பழமையானது. பல ஆண்டுகளாக பராமரிக்காததால், கான்கிரீட் கால்வாய் கரைகள் உடைந்தும், மடைகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன.

மேலும், கால்வாயின் இருபுறமும் அமைந்துள்ள ஓடைகள் வழியாக வரும் நீர், கால்வாயில் கலந்து பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான, குகை நீர் வழித்தடங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால், பாசன காலத்தில் திடீர் உடைப்பு ஏற்படுவதோடு, நீர் விரயம், நீர் வினியோக சிக்கல் என பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும், என, பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த, 7ம் தேதி, சாமராயபட்டி அருகே, 'அண்டர் டனல்' பகுதியில் திடீர் உடைப்பு ஏற்பட்டு, கால்வாய் கரை சேதமடைந்ததோடு, பாசன நீரும் வீணானது.

இந்நிலையில், பிரதான கால்வாயில், கி.மீ., 7.5 முதல், 16.5 வரையான, 9 கி.மீ., நீளத்துக்கு, 4.92 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

இதில், இரண்டு மேல்மட்ட நீர்வழிப்பாதை, 10 சிறிய அளவிலான 'அண்டர் டனல்', 20 மடைகள் புதுப்பித்தல் மற்றும் கரைகளில், கம்பி கட்டி கான்கிரீட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பணிகள் துவங்கியுள்ளது. அதிகாரிகள் கூறுகையில், 'கால்வாயை முழுமையாக புதுப்பிக்க நிதி கோரப்பட்டுள்ளது. தற்போது, 9 கி.மீ., துாரத்துக்கு புதுப்பிக்க ஒதுக்கிய நிதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உடைப்பு ஏற்பட்ட பகுதியில், முழுமையாக கம்பி கட்டி, கான்கிரீட் கரையாக மாற்றப்படுகிறது. இவ்வாறு செய்வதால் இனிமேல் உடைப்பு ஏற்படாது,' என்றனர்.

Updated On: 12 Feb 2024 12:04 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!