/* */

கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம்

திருப்பூரில், இளைஞரை கொலை செய்த வழக்கில் கைதான 3 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

கொலை வழக்கில் கைதான  3 பேர் மீது  குண்டர் தடுப்புச்சட்டம்
X

திருப்பூர் சந்திராபுரம், பாரதி நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மயிலாடுதுறை மாவட்டம் மேலையூரை சேர்ந்த எம். சதீஷ் வயது 25 என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் 7 பேர் கொண்ட கும்பல் சொராங்காடு பகுதியில் சதீஷ் தலையை வெட்டி கொலை செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை செய்த நல்லூர் காவல்துறையினர், மதுரை அலங்காநல்லூர் கல்லணையை சேர்ந்த எம். ராம்குமார் வயது 25, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த எஸ். சுபா பிரகாஷ் வயது 23, மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த புளிப்பட்டியை சேர்ந்த எஸ் மணிகண்டன் வயது 25 உட்பட 7 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ராம்குமார், சுபா பிரகாஷ், மணிகண்டன் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் எ.ஜி.பாபு உத்தரவிட்டார் .

இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று கொலை குற்றவாளிகளிடமும் காவல்துறையினர் வழங்கினர். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மீண்டும் சிறையில் மூன்று நபர்களையும் அடைத்துள்ளனர்.

Updated On: 25 March 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்