/* */

திமுக., தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றுகிறது: பாஜக., செயற்குழு தீர்மானம்

திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

திமுக., தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றுகிறது:  பாஜக., செயற்குழு தீர்மானம்
X

திருப்பூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா பேசினார்.

பாஜக.,மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கொரோனா தொற்றை வெற்றிக் கண்டு, மக்களின் வாழ்வாரதாரத்தை மேம்படுத்தி உலக அளவில் தேசத்தின் மதிப்பை உயர்த்தி வரும் பிரதமர் மோடிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது. திமுக., அரசின் அணுகுமுறைகள் மற்றும் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கதக்கது. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளை கட்டித்தர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுக அரசு தொடர்ந்து ஹிந்து கலாச்சாரம், நம்பிக்கைகள் மற்றும் கோவில்களின் நலன்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. 2021 ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்