/* */

கன மழை பாதிப்பு குறித்து மாநகராட்சியில் ஆலோசனை கூட்டம்

கன மழை பாதிப்பு குறித்தும், தடுப்பு நடவடிக்கை குறித்தும் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

கன மழை பாதிப்பு குறித்து மாநகராட்சியில் ஆலோசனை கூட்டம்
X

திருப்பூர் மாநகராட்சியில் தடுப்பு நடவடிக்கை குறித்து கமிஷனர் கிராந்திகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருப்பூர் மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 4 ம் தேதி பெய்த பலத்த மழையால், வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்பு குறித்தும், தடுப்பு நடவடிக்கை குறித்தும் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் கமிஷனர் கிராந்திகுமார்பாடி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி 2வது வார்டு கடந்த 4 ம் தேதி பெய்த பலத்த மழையால் 15 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட பொது மக்கள் வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், நொய்யல்ஆற்றில் வழியாக வரும் குடிநீர் பைப் லைன் உடைந்தது. மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளும், உடைந்த பைப் லைன் சரி செய்ய உத்தரவிடப்பட்டது. மழையால் ஏற்பட்ட பாதிப்பு கணக்கெடுக்கவும், தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் செயற்பொறியாளர் மற்றும் நான்கு மண்டல உதவி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Nov 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  7. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  8. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  9. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  10. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு