/* */

வரும் 12, 13ல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளது. வரும் 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

வரும் 12, 13ல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
X

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது.

இந்திய தேர்தல் கமிஷன் மூலம், ஆண்டுதோறும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுகிறது. முன்னதாக வரைவு பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்த பணிகள் நடைபெறும். ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதனால், வாக்காளர்கள், தேர்தல் வேளைகளில் எவ்வித பாதிப்பும் இல்லாமல், தங்களது ஓட்டை வாக்கு சாவடியில் பதிவு செய்ய முடியும். இவ்வாறு திருத்தம் செய்யாத பட்சத்தில், பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக, பெயரை சேர்க்கவோ, நீக்கவோ, முகவரி மாற்றம் போன்றவற்றை செய்ய வசதியாக, இதுபோன்ற சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளது. வருகிற 9-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.வரும் 2023 ஜனவரி 1-ம் தேதி, 18 வயது பூர்த்தி அடைந்தோர், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தங்கள் பகுதி தாலுாகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம்.

https://www.nvsp.in என்ற வாக்காளர் சேவை போர்ட்டல்,voter Helplineஎன்னும் செல்போன் செயலி மூலமாகவும், பட்டியலில் பெயர் சேர்க்கலாம். பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம்.

ஆனால், இதுபோன்ற தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, இத்தகைய மாற்றங்களை செய்ய முடியாத பட்சத்தில், இந்த சிறப்பு முகாம்கள் வாயிலாக, நேரடியாக பயன்பெறலாம். அல்லது, இந்த தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சனி, ஞாயிறு தினங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சனி, ஞாயிறு தினங்கள் விடுமுறை நாட்களாக இருப்பதால், பொதுமக்கள் எளிதாக இந்த முகாம்களில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.

இந்த சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி 18 வயது பூர்த்தியானோர் வாக்காளர் பட்டியலில் தவறாமல் தங்கள் பெயர்களை சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களாக உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு பொதுமக்கள் நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம். சிறப்பு முகாம்கள், காலை 10 மணி முதல், மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. திருத்தங்கள் செய்வதற்கான தேவையான ஆவணங்களுடன் பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 6 Nov 2022 5:51 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  7. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  10. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு