Begin typing your search above and press return to search.
தாராபுரம் தீயணைப்பு சார்பில் மழைக்கால பாதுகாப்பு ஒத்திகை
தாராபுரம் தீயணைப்பு சார்பில், மழைக்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், எதிர்வரும் வடக்கிழக்கு பருவ மழையை எதிர்கொண்டு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தீயணைப்புத்துறை சார்பில், பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இதில், மழைக்காலங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீர் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது எப்படி, ஏரி, குளம் குட்டையில் தவறி விழுந்தவர்களை மீட்பது எப்படி, தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது போன்ற பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தீயணைப்பு வீரர்கள் இந்த ஒத்திகையை செய்து காண்பித்தனர்.