/* */

சூதாட்டத்தில் 7 லட்சம் இழப்பு : இளைஞர் தற்கொலை

சூதாட்டத்தில் 7 லட்சம் இழப்பு : இளைஞர் தற்கொலை
X

இணையதள சூதாட்டத்தில் 7 லட்ச ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் மனவேதனையில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எல்வின் பிரட்ரிக் என்ற இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இணையதள சூதாட்டத்தில் ஆர்வமாக விளையாடி வந்த இவர், தொடர்ந்து பணத்தை இழந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி வரை ரூ. 7 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனவேதனையடைந்து திருப்பூருக்கு வந்த அவர், திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் யார் என்று அடையாளம் தெரியாததால் ரயில்வே காவல்துறையினர் அவரது புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பியதன் அடிப்படையில் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வந்த புகைப்படத்துடன் ஒத்து போயிருந்ததால் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Jan 2021 10:21 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?