/* */

ஆம்பூரில் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி

ஆம்பூரில் கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பஸ் நீண்ட நேரமாகியும் வராததால், எம்எல்ஏ நேரில் வந்து பஸ் வசதியை ஏற்பாடு செய்து தந்தார்.

HIGHLIGHTS

ஆம்பூரில் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்து  வராததால் பொதுமக்கள் அவதி
X

பொதுமக்களின் கோரிக்கையை உடனே செய்து தந்தார் எம்எல்ஏ.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து உமராபாத், பேரணாம்பட்டு, மற்றும் பச்சகுப்பம், மேல்பட்டி, குடியாத்தம், ஆகிய ஊர்களுக்கு செல்லும் அரசு பேருந்து சுமார் ஒரு மணி நேரமாக பேருந்து இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து உடனடியாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதனுக்கு பொதுமக்கள் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தனர்,

உடனடியாக சம்பந்தப்பட்ட ஆம்பூர் அரசு பேருந்து நிலையத்திற்கு வந்தார் எம்எல்ஏ. பின்னர் உரிய அதிகாரிகளிடம் போனில் பேசி சிறிது நேரத்தில் அரசு பஸ்சை ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வரவைத்தார். பஸ் இல்லாமல் அவதியுடன் காத்து நின்ற பொதுமக்கள் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

Updated On: 9 Sep 2021 6:26 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  8. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  9. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  10. காஞ்சிபுரம்
    இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம்...