Begin typing your search above and press return to search.
ஆம்பூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்
ஆம்பூரில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 1லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
HIGHLIGHTS

பறிமுதல் செய்த பணத்தை ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷகிலாவிடம் ஒப்படைத்த பறக்கும் படையினர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட உமர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி பல் மருத்துவர் ராஜன் என்பவர் காரில் 1லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தேர்தல் பறக்கும் படை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷகிலாவிடம் ஒப்படைத்தனர்