/* */

நெல்லையப்பர் கோவில் யானை தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவில் வாசல் முன்பு உள்ள தேசிய கொடிக்கு கோவில் யானை காந்திமதி, பிளிறி தேசியக்கொடிக்கு மரியாதை செய்தது

HIGHLIGHTS

நெல்லையப்பர் கோவில் யானை தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது.
X

தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி 

நாட்டின் 73வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் கோவிலில் முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் 73வது குடியரசு தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சுவாமி நெல்லையப்பர் கோவில் முன்பு விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே இந்திய தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் நிர்வாக அதிகாரி ராமராஜூ கொடியேற்றி மரியாதை செய்தார். கோவில் வாசல் முன்பு உள்ள தேசிய கொடிக்கு கோவில் யானை காந்திமதி, பிளிறி தேசியக்கொடிக்கு மரியாதை செய்தது.

தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர்.பொதுமக்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 5:32 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது