/* */

நெல்லை மாவட்டம்: 30,000 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர்

நெல்லை மாவட்டத்தில் 113 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டம்: 30,000 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர்
X

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள்.

தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் டூ தேர்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 113 மையங்களில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். நெல்லையில் மொத்தம் 30,291 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

இதையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு மையங்களில் கொரனோ பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. தேர்வர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. செல்போன் எடுத்து செல்லக்கூடாது. தேர்வு எழுதுவர்களைத் தவிர பிற நபர்கள் உள்ளே வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதேபோல் காலை 9 மணிக்கே அனைவரும் தேர்வு மையம் வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர். தேர்வில் முறைகேட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் 113 ஆய்வுக்குழு அலுவலர்களும், 13 பறக்கும் படை குழுக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலையில் 27 சுற்றுக்குழு அலுவலர்களும் தேர்வை கண்காணித்து வருகிறார்கள்.

வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் டி என் பி எஸ் சி தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 21 May 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை