நெல்லையில் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சி: அதிமுகவினர் மலர்தூவி மரியாதை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி நெல்லை அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
HIGHLIGHTS
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறைந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தலைமை கழக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள்,மாவட்ட மகளிரணி செயலாளர், பகுதி,ஒன்றிய, நகர,பேரூர்,வார்டு,கிளை கழக நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.