/* */

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

சிறப்பு ரயில்களில் கட்டண சலுகை வழங்குவது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறப்பு ரயில்களில் கட்டண சலுகை வழங்குவது உள்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ரயில்களில் கட்டணச் சலுகை வழங்க வேண்டும். அனைத்து ரயில்களிலும் ஏற்கனவே இருந்ததைப் போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் பொருத்தப்பட வேண்டும்.

மாற்று திறனாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக வரும் பாதுகாவலர்களுக்கு பிளாட்பாரம் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வசுந்தரி தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். குறிப்பாக மூன்று சக்கர வாகனங்கள் வீல் சேர் போன்றவற்றின் உதவியுடன் சில மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் பெண் மாற்றுத்திறனாளிகள் தங்கள் குழந்தைகளுடன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் ரத்து செய், ரத்து செய் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணத்தை ரத்து செய் என்று மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். இதையொட்டி நெல்லை சந்திப்பு நிலையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Updated On: 11 Aug 2021 10:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!