/* */

நெல்லையில் மாலை அணிந்து மண்டல விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

நெல்லையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

HIGHLIGHTS

நெல்லையில்  மாலை அணிந்து மண்டல விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
X

நெல்லை சந்திப்பு சாலை, குமார சுவாமி திருக்கோவிலில், கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு, மாலை  அணிந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள்.

சபரிமலை ஐயப்பன் திருக்கோவில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நேற்றைய தினம் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று, மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

இதையொட்டி, நெல்லை சாலை, குமாரசாமி திருக்கோவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இந்த நிகழ்ச்சிகளுக்காக, நெல்லை சந்திப்பு சாலை குமார சுவாமி திருக்கோவிலில் சிறப்பு ஹோமமும், அதனைத் தொடர்ந்து விநாயகர் சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, சுப்பிரமணியர் சன்னதி முன்பு, நீண்ட வரிசையில் காத்திருந்து, குருசாமிகளின் திருக்கரங்களால் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆர்வமாக அதிகளவிலான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.

Updated On: 17 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?