/* */

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
X

நெல்லை மாநகராட்சியின் முதல் மன்ற கூட்டம் இன்று தொடங்கிய நிலையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நெல்லை மாநகராட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றதில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 51 வார்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக சார்பில் மாநகராட்சி மேயராக சரவணன், துணை மேயராக ராஜூ பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு நான்கு மண்டல குழு தலைவர்களும் பொறுப்பேற்ற நிலையில் நெல்லை மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

அதேபோல் சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் பெண்கள் 2 பேர் உள்பட 3 பேர் கருப்புச் சட்டை அணிந்தபடி மன்றக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் சரவணன், ஆணையர் விஷ்ணு சந்திரன், துணை மேயர் ராஜூ ஆகியோர் மேடையில் வந்து அமர்ந்தனர். அப்போது மேயர் சரவணன் திருக்குறள் வாசித்தபடி அவையில் தனது பேச்சை தொடங்கினார்.

பின்னர் முதல்வர் அமைச்சர் உள்பட பலருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்களை மேயர் வாசித்துக் கொண்டிருக்க கருப்புச் சட்டையுடன் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும் கையில் மனுவுடன் மேடை முன்பு வந்து நின்றனர். இதை கவனித்த மாநகராட்சி ஆணையர் சரவணன் இருக்கையில் அமரும்படி அதிமுக உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் மேயர் முன்பு நின்று கொண்டிருந்தனர்.

பின்னர் தீர்மானங்கள் வாசித்து முடித்த உடனே கையிலிருந்த மனுவை மேயரிடம் வழங்கிவிட்டு மேயர் மற்றும் ஆணையர் முன்பு தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவையில் அதிமுக உறுப்பினர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும் மன்ற கூட்டத்தில் இருந்து கோஷங்களை எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து அதிமுக உறுப்பினர் சந்திரசேகர் கூறுகையில் - தமிழக அரசு சொத்து வரி யை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். 75 முதல் 100% வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து அதிமுக சார்பில் வெளிநடப்பு செய்துள்ளோம். எங்கள் தலைவர்களின் ஆலோசனைப்படி போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார் .

இதற்கிடையில் எதிர்கட்சியினர் இல்லாமல் தொடர்ந்து மேயர் தலைமையில் மன்ற கூட்டம் நடைபெற்றது.

Updated On: 11 April 2022 11:17 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!